மிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

174

முதன்முறையாக, இந்த நாட்டில் பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டைக்காய், சோளம் போன்ற சில இனங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, இந்த விதைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல வெளிநாடுகளில் இருந்தும் அந்த விதைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறை வல்லுனர்கள் மூலம் விதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அந்த விதைகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் தனியார் துறையினரால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here