follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுபுத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

Published on

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலகுவாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியின் ATM வசதி கொண்ட நடமாடும் சேவை இன்று (11) கொழும்பின் பல பகுதிகளில் வலம் வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று காலை கொழும்பின் பெஸ்டியன் மாவத்தை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் மக்கள் பணம் பெறுவதற்காக இந்த நடமாடும் சேவை செயற்படுத்தப்படுகின்றது.

இது தங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

நடமாடும் வாகனத்தை தயார் செய்து மிகக் குறுகிய கால அவகாசத்தில் கொழும்பு பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பஹா பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...