புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலகுவாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியின் ATM வசதி கொண்ட நடமாடும் சேவை இன்று (11) கொழும்பின் பல பகுதிகளில் வலம் வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று காலை கொழும்பின் பெஸ்டியன் மாவத்தை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் மக்கள் பணம் பெறுவதற்காக இந்த நடமாடும் சேவை செயற்படுத்தப்படுகின்றது.
இது தங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.
நடமாடும் வாகனத்தை தயார் செய்து மிகக் குறுகிய கால அவகாசத்தில் கொழும்பு பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பஹா பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தார்.