இன்று மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வெளியில் அல்லது மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நெற்பயிர்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்தவெளி இடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.