follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய பொலிசாருக்கு பணப்பரிசு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய பொலிசாருக்கு பணப்பரிசு

Published on

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது இடம்பெற்றுள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபா வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இரத்த பரிசோதனை கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...