follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்படும்

இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்படும்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் (12ம் திகதி) நாளையும் (13ம் திகதி) மதுபானசாலைகள் மூடப்படும்.

விசேடமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் சில்லறை விற்பனைக்காக மூடப்பட வேண்டும் என கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிறப்பு பூட்டிக் வில்லா உரிமம் பெற்ற இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நட்சத்திர வகுப்புகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் வசிக்கும் பயணிகளுக்கு இது பொருந்தாது.

மேலும், ஏப்ரல் 23, பக்புர பசலோஸ்ஸாவக போயா தினத்தன்று, நாடளாவிய ரீதியில் சில்லறை விற்பனையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இது தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 1913 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறைக்கு அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள கலால் நிலையங்கள் மற்றும் விசேட பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...