follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஇன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்படும்

இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்படும்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் (12ம் திகதி) நாளையும் (13ம் திகதி) மதுபானசாலைகள் மூடப்படும்.

விசேடமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் சில்லறை விற்பனைக்காக மூடப்பட வேண்டும் என கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிறப்பு பூட்டிக் வில்லா உரிமம் பெற்ற இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நட்சத்திர வகுப்புகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் வசிக்கும் பயணிகளுக்கு இது பொருந்தாது.

மேலும், ஏப்ரல் 23, பக்புர பசலோஸ்ஸாவக போயா தினத்தன்று, நாடளாவிய ரீதியில் சில்லறை விற்பனையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இது தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 1913 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறைக்கு அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள கலால் நிலையங்கள் மற்றும் விசேட பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...