follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Published on

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…

ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 6.00 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 1.50 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...