follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு பூஞ்சை உணவு"

“தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு பூஞ்சை உணவு”

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

தரப்படும் உணவு தரம் குறைந்ததாகவும், பூஞ்சை உடையதாகவும் உள்ளதாகவும், வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும் என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வகைக்கு ஒத்தான மீன்களையே மருத்துவமனைக்கு வழங்குவதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறுகிறார்.

இந்த உணவை வழங்கும் ஒப்பந்த நிறுவனம் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதாகவும், இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு பல தடவைகள் அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும் மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...