1,900 ரூபாய் கொத்து விற்பனை – உணவு விற்பனையாளர் கைது

8180

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவர் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டி ஒன்றின் விலை 1,900 ரூபாய் வசூலிக்க முற்பட்ட போது இதைக்கேட்டு சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

இதனை குறித்த சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here