follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஅதிவேக வீதியில் கொங்கிரீட் தூண் வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை

அதிவேக வீதியில் கொங்கிரீட் தூண் வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை

Published on

மீரிகம – கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயற்றிட்ட பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தி அபிவிருத்தி அதிகாரசபை சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் பெம்முல்ல – கதஒலுவாவ பகுதியில் கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பகுதிக்கு கொங்கிரீட் தூண்கள் இடும் செயற்பாடு 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதுடன், கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

நிலவும் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு 17 கிலோமீட்டர் நீளம் கொண்ட வீதியில் காணப்படும் அனைத்து தூண்களின் தரம் தொடர்பிலும் ஆராய்வதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...