கொழும்பு – புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்கள் இன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் அகற்றப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விற்பனை நிலையங்களை அகற்றியுள்ளனர்.
மிதக்கும் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையங்களால் பயணிகள் நடைபாதையில் செல்வதற்கு சிரமப்படுவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தக நிலையங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டமையானது நியாயமற்ற செயல் என அங்கு விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.