ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்தார்.
தலதா அத்துகோரள, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொள்ளுமாறு அவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று சமகி ஜன பலவேக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றாமல் நாலக கொட ஹேவாவின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.