follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்'ரூ.200 கோடி' சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவியான தம்பதி

‘ரூ.200 கோடி’ சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவியான தம்பதி

Published on

குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இங்கு யாரை அழைத்துக் கேட்டாலும் அவர்களுக்கு எப்படியாவது பணக்காரனாக மாற வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஆனால், இங்கே ஒரு தம்பதி தங்களின் பல கோடி சொத்தை நன்கொடை அளித்துவிட்டு துறவு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் தொழிலதிபர்கள் பவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி தான் இப்படிச் செய்துள்ளனர். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் அனைத்து செல்வங்களையும் மக்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த மாதம் நடக்கும் மத நிகழ்வில் அவர்கள் முழுமையாகத் துறவு வாழ்க்கைக்குச் செல்கிறார்கள்.

ஹிம்மத்நகரைச் சேர்ந்த இந்த பவேஷ் பண்டாரி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டில் அவரது 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன் இருவரும் இதேபோல துறவு வாழ்க்கை திரும்பினர். அவர்களைப் பின்பற்றி இப்போது பவேஷ் பண்டாரி தனது மனைவியுடன் செல்வத்தைத் தானமாக அளித்துவிட்டு துறவு வாழ்க்கை செல்கிறார். துறவு வாழ்க்கைக்குச் சென்ற தங்கள் பிள்ளைகளைப் பார்த்தே அவர்கள் இதைச் செய்துள்ளனர். செல்வம் மீதான ஆசைகளைத் துறந்து ஆன்மீக பாதைக்குச் செல்லவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், இத்தனை காலம் சொகுசு கார்களில் பயணித்து வந்த அவர்கள், இனிமேல் நாடு முழுக்க வெறுங்காலுடன் தான் நடந்து செல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் கோடிகளில் புரண்ட இவர்கள் இனி யாசகம் கேட்டு மட்டுமே வாழ வேண்டும். ஜைன துறவிகள் இரண்டை வெள்ளை நிற ஆடைகள் மற்றும் யாசகம் கேட்க ஒரு கிண்ணத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

உட்காரும் போது பூச்சிகளைக் கொன்றுவிடாமல் இருக்கத் துடைப்பத்தை வைத்து அந்த இடத்தில் இருக்கும் பூச்சிகளை அப்புறப்படுத்திய பிறகே அமர வேண்டும். சிறு உயிரினங்களுக்குக் கூட தீங்கு இழைக்காத அகிம்சைப் பாதை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பதற்கு இது அடையாளமாகும்.

குஜராத்தின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த பண்டாரி குடும்பத்தின் இந்த திடீர் முடிவு அம்மாநிலத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. துறவு வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் முன்பு பண்டாரி தம்பதிகள், 35 பேருடன் சேர்ந்து நான்கு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்கள் அனைத்து செல்வங்களையும் நன்கொடையாக அளித்தனர். மொபைல் தொடங்கி விலையுயர்ந்த அனைத்து பொருட்களையும் இவர்கள் பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...