follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதமிதா - கணவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு

தமிதா – கணவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு

Published on

கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரிடம் 34 இலட்சம் ரூபா மோசடி செய்து சிறையில் உள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இருந்து பெறப்பட்ட 34 இலட்சம் பணத்தில் 04 இலட்சம் பின்னர் அந்த நபருக்கு வழங்கப்பட்டதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மோசடியின் உண்மையான தொகை 30 இலட்சம் ரூபா என இன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இது குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து தமிதா மற்றும் அவரது கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...