முழு உலகமுமே பலஸ்தீனை தனி நாடாக ஆதரிக்க அமெரிக்கா மறுப்பு

1175

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனியர்களுக்கு முழு உறுப்புரிமையை அமெரிக்கா மறுத்துள்ளது.

உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரத்தைப் அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், “பலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்க வேண்டும்” என்று பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்துள்ளது.

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வரைவு வாக்கெடுப்பில் இருந்து விலகியதாகவும், மீதமுள்ள 12 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா இரு நாடுகளின் தீர்வை வலுவாக ஆதரிக்கிறது மற்றும் வீட்டோவைப் பயன்படுத்துவது பலஸ்தீனிய அரசின் எதிர்ப்பைப் பிரதிபலிக்காது என்று கூறியுள்ளது.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவை அமெரிக்கா வீட்டோ செய்வது ஒழுக்கக்கேடான மற்றும் நியாயமற்றது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here