follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் 5 வருடங்கள்

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் 5 வருடங்கள்

Published on

ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட தெய்வீக பூஜையுடன் ஆரம்பமானது.

அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, நாட்டின் 08 இடங்களில் தீவிரவாதிகள் குழு 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது, அங்கு 273 பேர் உயிரிழந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட தெய்வீக ஆராதனை, பேராயர் உதவி ஆயர் மேதகு அன்டன் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றதுடன், தீவிரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...