follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP1ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

Published on

தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக விமானப் பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐரோப்பாவுக்கான விமான சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தேவைப்படுவதுடன், விமானம் சுமந்து செல்லும் எடையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலண்டன் செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும். இதனால் இலண்டன் செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நேர மாற்றத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு மாற்று விமானங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக இலங்கை விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு...

ஐந்து இலட்சம் இலஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...