follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் கடத்தலில் மேலும் பல பாதுகாப்புப் படை உறுப்பினர்கள்

போதைப்பொருள் கடத்தலில் மேலும் பல பாதுகாப்புப் படை உறுப்பினர்கள்

Published on

முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உள்ளிட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தலில் பாதுகாப்புப் படையின் ஏனைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கும்பலை கைது செய்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முல்லேரிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லேரியாவில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் இருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு முல்லேரிய பொலிஸார் 500 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர். அவர்கள் சென்ற காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது.

கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறு போதைப் பொருட்களை மொத்தமாக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய இரண்டு கடற்படை அதிகாரிகள் வெள்ளவத்தை கடலோர காவல்படை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர். ரிமாண்ட் உத்தரவின் பேரில் இருவரும் முல்லேரியா பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...