follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் கடத்தலில் மேலும் பல பாதுகாப்புப் படை உறுப்பினர்கள்

போதைப்பொருள் கடத்தலில் மேலும் பல பாதுகாப்புப் படை உறுப்பினர்கள்

Published on

முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உள்ளிட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தலில் பாதுகாப்புப் படையின் ஏனைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கும்பலை கைது செய்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முல்லேரிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லேரியாவில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் இருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு முல்லேரிய பொலிஸார் 500 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர். அவர்கள் சென்ற காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது.

கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறு போதைப் பொருட்களை மொத்தமாக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய இரண்டு கடற்படை அதிகாரிகள் வெள்ளவத்தை கடலோர காவல்படை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர். ரிமாண்ட் உத்தரவின் பேரில் இருவரும் முல்லேரியா பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...