ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதத்தின் திகதி இரு கட்சிகளும் இணைந்து கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்ற எழுத்துமூல அறிவிப்பு தேசிய மக்கள் சக்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளில் ஏதாவது ஒன்றில் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.