சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

331

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மே 6 முதல் 15ம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற உள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பொதுச் சான்றிதழ் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here