ஜூன் 30ம் திகதிக்கு முன் பதிவு செய்யுங்கள்

1442

சாரதிகளுக்கு மலிவு விலையில் கட்டண மீட்டர்களை இறக்குமதி செய்ய அல்லது வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் (30) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக பொலிஸாருடன் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

தலைவர் ரஹ்மான் மேலும் கூறியதாவது,

“பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் இன்றியமையாத அங்கமாகும். இது தொலைபேசி மீட்டர் அல்ல. சாரதிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதற்கு மீட்டர்களை இறக்குமதி செய்யவோ அல்லது வழங்கவோ அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பதிவு ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30க்கு முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொலிஸாருடன் இணைந்து பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here