follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியில் நெதன்யாகு?

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியில் நெதன்யாகு?

Published on

வெளிநாட்டு ஊடகங்களின்படி, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) திட்டங்களால் இஸ்ரேலிய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

அவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி பட்டியலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹேக்’கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மிகக் கடுமையான குற்றங்களுக்காக சர்வதேச சட்டத்தின் கீழ் தனிநபர்களை குற்றஞ்சாட்டவும் விசாரணை செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் லிபிய தலைவர் முயம்மர் கடாபி, உகண்டா இராணுவத் தலைவர் ஜோசப் கோனி ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.

இந்த திட்டம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் தனது நாட்டை பாதுகாக்கும் முயற்சியை குலைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...