சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

233

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (மே 4) திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் நாளை பொதுப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம், ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை திறந்திருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை www.drp.gov.lk என்ற ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here