follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபரிசோதனைக்கு முன்பாகவே நாட்டில் பரவும் ஒமிக்ரோன்? சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

பரிசோதனைக்கு முன்பாகவே நாட்டில் பரவும் ஒமிக்ரோன்? சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறிய முடியும் என்றும் மாதிரிகள் மூலம் வைரஸை கண்டறியும் வரை, நாடு முழுவதும் தொற்று பரவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டைக் கொண்டு செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை தற்போதைய நிலையில் நாட்டை முடக்கும் எண்ணம் சுகாதார அமைச்சுக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...