கடந்த வருடம் இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.