follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவிளையாட்டுலக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

Published on

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாட களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் – சால்ட் முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ஓட்டங்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். சுனில் நரைன், லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய 39 பந்துகளில் 81 ஓட்டங்கள் அடித்த நிலையில் பந்து பிடி எடுப்பு முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்கள் அடித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் – குல்கர்னி களமிறங்கினர். குல்கர்னி 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய கே.எல் ராகுல் 25 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 5 ஓட்டங்களிலும் அதிரடியாக விளையாடி ஸ்டோய்னிஸ் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா 3 விக்கெட்டுகளையும், ரஸல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...