கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வழக்கமான பரீட்சை நிறைவடைந்த பின்னர் விடைத்தாள் மதிப்பீடு 2 நிலைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்குத் தேவையான பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 35,000 என்பதுடன், கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நேற்று (06) ஆரம்பமானது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.