follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1புதிய விசா முறைமை குறித்து சனத்தின் பதிவு

புதிய விசா முறைமை குறித்து சனத்தின் பதிவு

Published on

புதிய விசா முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்துவதை தாம் கண்டதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் தலைவரும் பிரதிநிதித்துவ அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது X கணக்கின் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தாம் உட்பட பல இலங்கையர்கள் வியர்வையையும் கண்ணீரையும் சிந்தி நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய நிதி ஆதாயம் இன்றி செயற்பட்டதாக அவர் கூறுகிறார். எனவே இவ்வாறு மீண்டு வந்துள்ள சுற்றுலா வர்த்தகம் புதிய விசா முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் சோர்வடைய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

“நான் உட்பட பல இலங்கையர்கள் வியர்வை, கண்ணீர் மற்றும் நிதி ஊக்குவிப்பு இல்லாமல் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களித்தோம்.

“புதிய விசா முறை குறித்து சுற்றுலாப் பங்குதாரர்களிடமிருந்து நான் நிறைய கவலைகளைக் கண்டேன், இந்த சிக்கலை விரைவில் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தனது குறிப்பில் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...