சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடரவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் சீர்குலைந்துள்ளன.
இதனால் இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளக மற்றும் வெளிமாநிலங்களில் கல்வி கற்கும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், படிப்புகளும் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் அமைச்சரவையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்ததன் பின்னர், பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.