follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1நாளை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

நாளை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

Published on

சுகாதார ஊழியர்கள் தொடர்பான பொருளாதார நீதிக்காக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கையை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது, ஆனால் ஒப்புக்கொண்டபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.

மே மாதம் சம்பளத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப அறிக்கையின் ஒரு பகுதி சேர்க்கப்படும் என்றும், மீதமுள்ள பகுதியை வழங்குவது குறித்து நான்கு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு பொருந்தி இருந்ததாகவும் ஆனால் இதுவரைக்கும் அது குறித்த உறுதிகள் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மே மாதத்தில் சம்பளத்துடன் சேர்க்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்ட சுகாதார சேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீருடை அணியாத ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் சுகாதார சேவையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க போராட்டத்தினை அமுல்படுத்தாமல், மாகாணங்களில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்..

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...