இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனியாதெரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.