விவசாயத் துறையில் தொழில்களுக்காக இளைஞர்கள் கொரியாவுக்கு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், பரீட்சை நடத்தாமல் அவர்களை கொரியாவுக்கு அனுப்புவதற்கு இணக்கம் எட்டப்படவில்லை எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் ஹம்பாந்தோட்டை “ஜெயகமு ஸ்ரீலங்கா என்னுடன் தொடங்கு” நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தினருக்கு வசதிகளை வழங்குதல், வெளிநாடு செல்வதற்கான சரியான வழியை இலங்கை இளைஞர்களுக்கு தெரியப்படுத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் கடந்த 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெற்றது.
“.. இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே எங்கள் நம்பிக்கை, நாங்கள் எங்கள் இளைஞர்களை வேலைக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று கூறும்போது, எங்கள் இளைஞர்களை பரீட்சை இல்லாமல் கொரியாவுக்கு அனுப்ப முடியும் என சில கடத்தல்காரர்கள் எங்கள் பெயர்களை விற்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணம் வசூல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரியாவில் பரீட்சையின்றி வேலை வாய்ப்புத் திட்டம் இல்லை எனவே, இப்படிப்பட்ட நபர்களை உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.
தற்போது கொரிய நிபுணர்கள் முன்னிலையில் நேர்காணலுக்குச் செல்லும் நெசவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது எனது நண்பர்கள், உறவினர்கள் என கூறி சிலர் பணம் வசூல் செய்துள்ளனர். அப்படி யாரேனும் பணம் வசூலித்தால், அதை என்னிடமும் உடனே சொல்லுங்கள்.
ஓரத்தில் இருந்த நாடு இப்போது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்துள்ளது எனவே இதை இன்னும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசையில் உள்ள பல எம்.பி.க்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்..”