இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் டொலர்களை அனுப்பி வைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
எரிபொருள், எரிவாயு வரிசைகள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை நீக்கி நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்ப 500 மில்லியன் டொலர்களின் பங்குதாரராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் படி முறையாக பணம் அனுப்ப ஊக்குவிக்கப்பட்டது.
நாட்டிற்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமங்களை வழங்கல், வீட்டுவசதி, பல்நோக்கு கடன் முன்மொழிவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விமான நிலையத்தில் “ஹோப் கேட்” என்ற சிறப்பு வாயில் போற்றவைகள் விசேடமாக வழங்கப்பட்டுள்ளன