follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவெளிநாடு தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

Published on

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் டொலர்களை அனுப்பி வைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு வரிசைகள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை நீக்கி நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்ப 500 மில்லியன் டொலர்களின் பங்குதாரராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் படி முறையாக பணம் அனுப்ப ஊக்குவிக்கப்பட்டது.
நாட்டிற்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமங்களை வழங்கல், வீட்டுவசதி, பல்நோக்கு கடன் முன்மொழிவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விமான நிலையத்தில் “ஹோப் கேட்” என்ற சிறப்பு வாயில் போற்றவைகள் விசேடமாக வழங்கப்பட்டுள்ளன

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...