follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1சுகாதார தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு வடமேற்கில்

சுகாதார தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு வடமேற்கில்

Published on

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (15) வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகிறது.

இதன்படி, வடமேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

சீருடை கொடுப்பனவுடன் ஒப்பிடும் போது ஏனைய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படாமை மற்றும் குறிப்பிட்ட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் போது 15 குழுக்கள் புறக்கணிக்கப்பட்டமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...