follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்ரஷ்ய - உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

Published on

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

கார்கிவ் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மோதலில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

7,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

இருப்பினும், ரஷ்ய படையெடுப்பை அனுமதிக்க மாட்டோம் என்று உக்ரைன் வலியுறுத்துகிறது.

படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக நிறுத்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீர்மானித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி நாளைய தினம் ஸ்பெயின் மன்னரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...