follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்ரஷ்ய - உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

Published on

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

கார்கிவ் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மோதலில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

7,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

இருப்பினும், ரஷ்ய படையெடுப்பை அனுமதிக்க மாட்டோம் என்று உக்ரைன் வலியுறுத்துகிறது.

படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக நிறுத்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீர்மானித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி நாளைய தினம் ஸ்பெயின் மன்னரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...