கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி நகரில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், அந்த மழையுடன் போகம்பர மலை உச்சியில் இருந்து பாரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் புகையிரத நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் புகையிரத நிலையத்தின் புகையிரதப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.
முறைசாரா முறையில் வடிகால்கள் அமைக்கப்படுவதாலும், வடிகால்கள் மூடப்படுவதாலும் ரயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.