follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுகுசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

Published on

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா செல்வதற்காக சமர்ப்பித்த வீசா விண்ணப்பம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா கருத்துத் தெரிவித்தார்.

குசலின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் இணைந்து குசல் செயற்பட்டு வருவதாக அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

“அவரிடம் மேலும் சில ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களைக் கொடுத்த பிறகு, அடுத்த ஓரிரு நாட்களில் அவருக்கு விசா கிடைக்கும்.”

எனவே மெண்டிஸுக்கு பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி ஜூன் 02 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...