follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

Published on

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பல மூத்த ஈரானிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

அதில் உயிரிழந்த ஏனைய அதிகாரிகளான;

  • வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் (Foreign Minister Hossein Amirabdollahian)
  • கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி (East Azerbaijan Governor Malek Rahmati)
  • கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஈரானிய உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேமின் பிரதிநிதி (Representative of the Iranian supreme leader in East Azerbaijan Mohammad Ali Ale-Hashem)
  • ஜனாதிபதி காவலரின் தலைவர் மெஹ்தி மௌசவி (Head of presidential guard Mehdi Mousavi)
  • ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி மற்றும் பணியாளர்கள்

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடனான ஒரு நிகழ்வில் இருந்து ரைசியும் அவரது சகாக்களும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீப் (Javad Zarif), ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஹொசைன் அமிரப்துல்லாஹியனின் மரணங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அமிரப்துல்லாஹியனை “என் அன்பான சகோதரர்” என முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் விவரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து பற்றிய செய்தி “வேதனையானது” என அவர் பதிவு செய்துள்ளார்.

“தியாகிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. உயிர் தியாகிகளுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் அமைதி மற்றும் பொறுமையையும் ஈரானிய மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நான் விரும்புகிறேன்.” என அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...