follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

Published on

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் அடுத்த ஜனாதிபதி குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

நாட்டின் அரசியலமைப்பின் படி, ஒரு இடைக்கால ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார். தற்போது நாட்டின் “முதல் துணை ஜனாதிபதியாக” பணிபுரிபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.

அந்த பதவியை தற்போது 68 வயதான முகமது மொக்பர் வகிக்கிறார். நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக மொக்பர் நியமிக்கப்படுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரும் அங்கம் வகிக்கும் மூவர் குழு, 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தலைத் திட்டமிட வேண்டும்.
சபையின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் தலைமை நீதிபதி ஆவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...