follow the truth

follow the truth

August, 28, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

Published on

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது.

கடந்த 10ம் திகதி நடந்த பார்லிமென்ட் ஹவுஸ் கமிட்டி கூட்டத்தில் இப்படி முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு அல்லது போதுமான உணவுக்கு உண்ணக்கூடிய உணவை வழங்கவும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு, எம்.பி.க்களிடம் இருந்து வசூலிக்கும் தொகைக்கு ஏற்றவாறு, நல்ல சாப்பாடு வழங்க, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையின் தலைவருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஏறக்குறைய இருபது எம்.பி.க்கள் சில நாட்களாக நாடாளுமன்ற சாப்பாட்டு மண்டபத்தில் உணவு உண்பதை தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவை பாராளுமன்றம் செலவிடுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதில் பெரும்பாலான பணம் நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...