follow the truth

follow the truth

July, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

Published on

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது.

கடந்த 10ம் திகதி நடந்த பார்லிமென்ட் ஹவுஸ் கமிட்டி கூட்டத்தில் இப்படி முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு அல்லது போதுமான உணவுக்கு உண்ணக்கூடிய உணவை வழங்கவும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு, எம்.பி.க்களிடம் இருந்து வசூலிக்கும் தொகைக்கு ஏற்றவாறு, நல்ல சாப்பாடு வழங்க, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையின் தலைவருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஏறக்குறைய இருபது எம்.பி.க்கள் சில நாட்களாக நாடாளுமன்ற சாப்பாட்டு மண்டபத்தில் உணவு உண்பதை தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவை பாராளுமன்றம் செலவிடுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதில் பெரும்பாலான பணம் நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...