follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் முதலாவது பேரணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் முதலாவது பேரணி

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்பலந்தோட்டை சந்தியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்த முதலாவது மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பேரணியை பெருந்தொகையான மக்கள் பங்களிப்புடன், முன்னணி அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...