follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

Published on

அமெரிக்காவின் டெட்ராய்டில் இருந்து வடக்கே சுமார் 30 மைல்கள் (48 கிலோமீட்டர்) தொலைவில் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப்பில் உள்ள “ஆக்ஸ்போர்டு உயர்நிலை பாடசாலையில்” இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயதுடைய சந்தேக நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் நோக்கம் உடனடியாகத் தெரியாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறிவைத்தும்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை அடுத்து,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...