follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2குஜராத் கோர விபத்து : நால்வர் கைது

குஜராத் கோர விபத்து : நால்வர் கைது

Published on

இந்தியாவில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு, நிலையத்தின் முகாமையாளர் உட்பட நால்வரை கைது செய்துள்ளது.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுத்து உடல்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...