follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு

Published on

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ.480, முருங்கை காய் ரூ.720, கேரட் ரூ.240, மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, புடலங்காய் ரூ.320, பூசணி ரூ.160, கத்தரிக்காய் ரூ.240, முட்டைகோஸ் ரூ.240, வெண்டைக்காய் ரூ.400, மரவள்ளி கிழங்கு ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...