follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2தென்னாப்பிரிக்க தேர்தல் ஆரம்பம்

தென்னாப்பிரிக்க தேர்தல் ஆரம்பம்

Published on

தென்னாப்பிரிக்கர்கள் புதிய நாடாளுமன்றம் மற்றும் ஒன்பது மாகாண சட்டமன்றங்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி சிறில் ரமபோசா தலைமையிலான ANC கட்சியை தோற்கடிக்கும் நோக்கில் இது இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கருத்துக் கணிப்புகளின்படி, 1994 முதல் ஆட்சியில் இருக்கும் ANC பெரும்பான்மையை இழக்கக்கூடும்.

நாடு முழுவதும் பல வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், தேசிய மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் 70 கட்சிகளும் 11 சுயேச்சை எம்.பி.க்களும் போட்டியிட்டு சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

1994 ஆம் ஆண்டு வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்கு வந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) ஆட்சிக்கு வந்த பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஏழாவது ஜனநாயக பொதுத் தேர்தல் இதுவாகும்.

ஆனால் ஜனாதிபதி சிரில் ரமபோசா தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கடும் அழுத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு 32% ஆக உயர்ந்த வேலையின்மை விகிதம், தொடர்ந்து பொருளாதார சமத்துவமின்மை, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அடிக்கடி மின்வெட்டு ஆகியவை அதன் பிரபலத்தை குறைத்துள்ளன.

2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், தென்னாப்பிரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 130 கற்பழிப்புகளும் 80 கொலைகளும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த உயர்மட்ட வன்முறைக் குற்றம் அதிகாரிகள் மீதான நம்பிக்கையையும் குலைத்துள்ளது.

எனினும், ஆளும் ANC தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்தால், முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்.

இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி DA, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் மற்ற 10 கட்சிகளுடன் கையெழுத்திட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல்...