follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி

Published on

சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கள் காரணமாக 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5 பேரை காணவில்லை.

சீரற்ற காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

9,764 குடும்பங்களைச் சேர்ந்த 36,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,174 பேர் 32 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

4,119 வீடுகள் பகுதியளவிலும், 28 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பலவெல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 377 மில்லிமீற்றரை எட்டியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலப் பொறுப்பதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...