follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து விசேட அறிவிப்பு

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து விசேட அறிவிப்பு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை பாடசாலைகள் நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் கீழே உள்ளன.

சப்ரகமுவ மாகாணம்

* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

தென் மாகாணம்

*காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
*மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

மேல் மாகாணம்

* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச். டி. குஷான் சமீர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...