follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமேற்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவும் ஒருவர்.

பிங்கிரிய தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சமந்த பிரதீப் குமாரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அவர்கள் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமித்தார்.

அதுமட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதியின் அழைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் முன்னாள் பிரதம அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை பொத்துவில் தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...