follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

Published on

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக 2023ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் ஊடாக பாடசாலைகளில் அத்தியாவசியமான சீரமைப்புப் பணிகளை அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூன்று வருடங்களாக விடுபட்ட கல்வி நிர்வாக சேவை தரம் 3 தகுதி அடிப்படையிலான நியமன நடவடிக்கைகள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளில் நிறுத்தப்பட்ட அனைத்து பாடசாலை விளையாட்டுகளும் வருடாந்தம் மீண்டும் நடாத்தப்பட்டு விடுபட்ட அனைத்து விளையாட்டுகளும் நடாத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், கல்விப் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் பாடசாலைக்குள் தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...