follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை இரட்டிப்பாக்க தீர்மானம்

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை இரட்டிப்பாக்க தீர்மானம்

Published on

பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (09) அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், முன்பள்ளி ஆசிரியர்களின் 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...